Saturday 5 January 2013

புதுவை பள்ளிகளில் புகார் பெட்டி



           புதுவை ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்2 மாணவியை கல்வி அமைச்சர் தியாகராஜன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு  ஆகியோர் நேரில் பார்வையிட்டு பெற்றோருக்கு ஆறுதல்
கூறினர். அப்போது மாணவியின் தாய் ராஜிவி கதறி அழுதபடி அமைச்சர்களிடம் நடந்த சம்பவங்களை விளக்கினார்பின்னர் வெளியில் வந்த கல்வி அமைச்சர் தியாகராஜன் கூறுகையில்,புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி அமைக்கப்படும். இதில் மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை புகாராக தெரிவிக்கலாம். இதற்காக சிறப்பு அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படுவர். பாதிக்கப்பட்ட மாணவியின் மேற்படிப்புக்கான செலவை அரசே ஏற்கும் என்றார். என்று கூறினார்.

No comments:

Post a Comment