Tuesday 22 January 2013

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிப்பு



            தேசிய சர்வேயின்படி, நாடு முழுவதும் மொத்தம் 23 கோடி குழந்தைகள், 13 லட்சம் பள்ளிகளில் பயில்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. பல்வேறான அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், 22.8 கோடி மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 1 முதல் 12ம் வகுப்பு வரை, 13.67%
சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டில், 20.3 கோடி மாணவர்களே பள்ளிகளில் சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களின் பள்ளி சேர்க்கை விகிதம் 19.1% அதிகரித்துள்ளது. சேர்க்கை விகிதங்கள் இவ்வாறு இருக்க, கிராமப்புற பள்ளிகளில், ஐந்தில், ஒன்றுக்கு குடிநீர் வசதியில்லை. பத்தில், 3 பள்ளிகளில் சிறுநீர் கழிக்கும் வசதியில்லை. ஏறக்குறைய பாதி பள்ளிகளில், விளையாட்டு மைதான வசதியில்லை. அதேசமயம், இவற்றில் பல சிக்கல்களும் உள்ளன. பெண் குழந்தைகளின் கல்வியானது, தொடக்க கல்விக்குப் பிறகு, அதிகளவில் தடைபடுகிறது என்றும் அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment