Monday 14 January 2013

தனியார் பள்ளிகளை மூட வேண்டும் - க. குணசேகரன்


              தனியார்மயத்தை கல்வியில் ஊக்குவிக்கவே 25% இட ஒதுக்கீடு, கட்டண நிர்ணயம் போன்றவற்றை அரசு மேற்கொள்கிறதுஎன்று குற்றம்சாட்டுகிறார் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழு உறுப்பினரும் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறை
பேராசிரியருமான டாக்டர் . கருணானந்தம். கடந்த மாதம் சென்னை, மதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டில் ஆற்றிய உரையில், கல்வி தனியார்மயமாவதை ஏன் எதிர்க்கவேண்டும் என்பதை விரிவாக விளக்கினார். ‘2002-ல் அரசியல் சட்டத்தின் 86வது பிரிவுக்கு திருத்தம் கொண்டு வந்தது பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. காங்கிரசும் அதை ஏற்றுக் கொண்டது. அந்தத் திருத்தத்தை பலர் வெற்றியாகக் கொண்டாடினார்கள். மக்களுக்கு கல்வி அளிக்க அரசு எடுக்கும் நடவடிக்கை என்று சித்தரித்தார்கள். ஆனால் உண்மையில் மாற்றியது என்ன? 1) அடிப்படை உரிமைகளில் ஒன்றை புதிதாக சேர்ப்பது. 2) வழிகாட்டும் நெறிகளில் ஒன்றை மாற்றுவது. 3) அடிப்படை கடமைகளின் ஒன்றை புதிதாக சேர்ப்பது.
                          ‘21
ஷரத்தில் 6 முதல் 14 வயது வரையிலான எல்லா குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்பது சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு மாநில அரசைக் கைகாட்டியது. மாநில அரசு உள்ளாட்சி அரசைக் கைகாட்டியது. இரண்டாவதாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 45வது ஷரத்தில் 10 ஆண்டுகளுக்குள் (அதாவது 1960க்குள்) 14 வயதிலான அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி கொடுக்க அரசு முயற்சி செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருப்பதை, 6 வயது வரை மழலையர் பராமரிப்பு கல்வி தர முயற்சிக்க வேண்டும் என்று மாற்றியிருக்கிறார்கள். மூன்றாவதாக, 6 முதல் 14 வயது வரை குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியது பெற்றோரின் கடமை என்பதை சேர்த்திருக்கிறார்கள். ஆனால் கல்வி என்பது இதற்கு முன்பே ஆரம்பமாகிறது.
6
ஆண்டு வரையில் பணக்கார குழந்தைகளுக்கும் ஏழை குழந்தைகளுக்கும் ஏற்படப் போகும் இடைவெளியை நிரப்ப எந்த திட்டமும் இல்லை.’
மேலும், ‘தனியார் பள்ளியில் 25% இடம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நியாயமான கட்டணத்தை அரசே செலுத்தி விடும் என்கிறார்கள். இலவசம் என்று சொல்லி விட்டு நியாயமான கட்டணம் என்றால் எப்படி? அவர்கள் சொல்லும் நியாயமான கட்டணம் என்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்படியாவது என்பதில்லை, பள்ளிகளுக்கு கட்டுப்படியாகுமா என்பதைத்தான் குறிக்கிறது.’
                 கல்வி நம் தேவை என்பதைப் புரிந்துகொண்டு, அதைப் பயன்படுத்தி கோடிகளை குவிக்க வேண்டும் என்ற ஆசையால்தான் கல்வி நிலையங்களை தனியார் முதலாளிகள் நடத்துகிறார்கள் என்கிறார் கருணானந்தம். ‘நாம் விரும்புவது மக்களிடம் இருந்து மாணவர்களை அந்நியப்படுத்தாத கல்வி. உழைக்கும் மக்களுக்கான கல்வி.’

No comments:

Post a Comment