Thursday 10 January 2013

அறிவுசார் சமுதாயத்தை உருவாக்குவதில் குஜராத் முக்கிய பங்கு : மோடி ஆர்வம்



             குஜராத் மாணவர்களுக்கு, வெறும் சான்றிதழ்களை மட்டும் வழங்குவதில்லை. மாணவர்கள், அவர்கள் சார்ந்த துறைகளில் போதிய திறனைப் பெற்று, வேலைவாய்ப்புகளை பெறவும் வழிவகை செய்கிறோம். ஆராய்ச்சி, தொழில்நுட்பத்திறன், தகவல் தொடர்புதிறன் மேம்பாடு
ஆகியவற்றை பெறவும், இம்மாநாடு வழிவகை செ#யும். இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.வரும், 2020ல், 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் தான், அதிகளவில் இருப்பர் என, ஒரு ய்வில் தெரிய வந்துள்ளது. இளைஞர் சக்தியை நல்வழிப்படுத்தி, தரமான கல்வியையும், தொழில்நுட்பத்தையும் வழங்கினால், அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.இவ்வாறு மோடி பேசினார். இங்கிலாந்து, கனடா, பின்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்கலைகளுடன், குஜராத் மாநில பல்கலைகள், பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.குஜராத் மாணவர்கள், ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு சென்று படித்தல், ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபடுதல், தொழில்நுட்ப திறன்களை பெறுதல் ஆகியவற்றுக்கு, இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும்.தமிழகத்தில் இருந்து, எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் வி..டி., பல்கலையும், மாநாட்டில் பங்கேற்றுள்ளன. மேலும், தமிழ்நாடு விளையாட்டு பல்கலை, வித்யாபாரதி ஆகிய கல்வி நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.

No comments:

Post a Comment