Thursday 31 January 2013

10ம் வகுப்பு தனித்தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு


               பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியரின் முடிவுகள், இன்று, தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த தனித்தேர்வை எழுதிமறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் முடிவுகள் இணையதளத்தில், இன்று (ஜனவரி 31) வெளியிடப்படும். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கு, புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது குறித்து, விரைவில், தபால் வழியாக தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment