Tuesday 1 January 2013

பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணை: (காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 வரை)


மார்ச் 27 புதன்கிழமை -மொழிப்பாடம் -முதல் தாள்
மார்ச் 28 வியாழக்கிழமை -மொழிப்பாடம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1 திங்கள்கிழமை - ஆங்கிலம்  - முதல் தாள்
ஏப்ரல் 2 செவ்வாய்க்கிழமை ஆங்கிலம் - இரண்டாம் தாள்
ஏப்ரல் 5 வெள்ளிக்கிழமை கணிதம்
ஏப்ரல் 8 திங்கள்கிழமை அறிவியல்
ஏப்ரல் 12 வெள்ளிக்கிழமை சமூக அறிவியல்
           மாணவர்களுக்கு காலை 10 மணிக்கு வினாத்தாள்
வழங்கப்படும். அதைப் படிக்க 10 நிமிஷங்களும், விடைத்தாளைப் பூர்த்தி செய்ய 5 நிமிஷங்களும் வழங்கப்படும். தேர்வு 10.15 மணிக்குத் தொடங்கும். பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. தலைமையாசிரியர்களின் கோரிக்கையை அடுத்து விவரங்களைப் பதிவு செய்ய கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து வழங்கிய பிறகு தேர்வு மையங்கள் அமைக்கும் பணி, ஹால் டிக்கெட் வழங்கும் பணி ஆகியவை தொடங்கும்.

No comments:

Post a Comment